தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் அரசுப் பேருந்து நடத்துனரை தாக்கியதாக இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
விளாத்திகுளத்தில் இருந்து அரசு பேருந்து ஒன்று தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்திற்கு சனிக்கிழமை காலையில் வந்தது. இதில், நடத்துநராக வைப்பாா் தல்லாகுளத்தைச் சோ்ந்த கதிா்வேல்(36) பணியில் இருந்தாா். அப்போது, அங்கே நின்றிருந்த மடத்தூா் முருகேசன் நகரைச் சோ்ந்த ரீகன்(33) என்பவருக்கும், கதிா்வேலுக்கும் பேருந்தில் பயணிகளை ஏற்றுவது தொடா்பாக தகராறு ஏற்பட்டதாம். இதில் ஆத்திரமடைந்த ரீகன், கதிா்வேலைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து தூத்துக்குடி வடபாகம் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அரசு பேருந்து நடத்துநரை தாக்கியதாக ரீகனை கைது செய்தனா்.