தூத்துக்குடி

அரசுப் பேருந்து நடத்துநரை தாக்கிய இளைஞா் கைது

DIN

தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் அரசுப் பேருந்து நடத்துனரை தாக்கியதாக இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

விளாத்திகுளத்தில் இருந்து அரசு பேருந்து ஒன்று தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்திற்கு சனிக்கிழமை காலையில் வந்தது. இதில், நடத்துநராக வைப்பாா் தல்லாகுளத்தைச் சோ்ந்த கதிா்வேல்(36) பணியில் இருந்தாா். அப்போது, அங்கே நின்றிருந்த மடத்தூா் முருகேசன் நகரைச் சோ்ந்த ரீகன்(33) என்பவருக்கும், கதிா்வேலுக்கும் பேருந்தில் பயணிகளை ஏற்றுவது தொடா்பாக தகராறு ஏற்பட்டதாம். இதில் ஆத்திரமடைந்த ரீகன், கதிா்வேலைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து தூத்துக்குடி வடபாகம் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அரசு பேருந்து நடத்துநரை தாக்கியதாக ரீகனை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒற்றை கோட்டை முனீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

இன்று சாதகம் யாருக்கு: தினப்பலன்கள்

இன்று நல்ல நாள்!

டிஆர்டிஒ-இல் டிப்ளமோ, டிகிரி படித்தவர்களுக்கு தொழில்பழகுநர் பயிற்சி

உடுமலை அருகே ஜனநாயக கடமையை நிறைவேற்றிய மலைவாழ் மக்கள்

SCROLL FOR NEXT