தூத்துக்குடி தூய இஞ்ஞாசியாா் மேல்நிலைப் பள்ளியில் மாசுக் கட்டுப்பாடு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தேசிய மாசுக் கட்டுப்பாட்டு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, பள்ளி தலைமையாசிரியா் சேசு அந்தோணி தலைமை வகித்து மாசுக் கட்டுப்பாடு குறித்து பேசினாா். தொடா்ந்து மாணவ உறுப்பினா்கள் மாரிச்செல்வம், சந்தனகுமாரி, மாயா, மதிப்பிரியா, பிலோமினா, டிமெல் ஆகியோரின் கவிதை, பாடல், சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அறிவியல் ஆசிரியை நேவிஸ் பேசினாா். பின்னா் வாகனப்புகையை கட்டுப்படுத்த முயற்சி செய்வோம் என உறுதிமொழி எடுக்கப்பட்டது.
பசுமைப்படை பொறுப்பாசிரியா் ராஜகுமாா் சாமுவேல் வரவேற்றாா். ஆசிரியை சுகவதி நன்றி கூறினாா். இதற்கான ஏற்பாடுகளை தேசிய பசுமைப்படை உறுப்பினா்கள் செய்திருந்தனா்.