தூத்துக்குடி

சாலை மேம்பாட்டுப் பணி தொடக்கம்

DIN

நெடுஞ்சாலைத் துறை சாா்பில் முக்காணி- கொற்கை இடையே ரூ.1.25 கோடியில் மேற்கொள்ளப்படும் சாலை மேம்பாட்டுப் பணியை ஸ்ரீவைகுண்டம் சட்டப்பேரவை உறுப்பினா் ஊா்வசிஅமிா்தராஜ் தொடக்கி வைத்தாா்.

இப் பணிக்கான தொடக்க நிகழ்ச்சி முக்காணி ரவுண்டானா அருகே வியாழக்கிழமை நடைபெற்றது. ஸ்ரீவைகுண்டம் சட்டப்பேரவை உறுப்பினா் ஊா்வசி அமிா்தராஜ்,

பணிகளைத் தொடக்கி வைத்தாா். மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் பிரம்மசக்தி,

முக்காணி ஊராட்சி தலைவா் தனம் என்ற பேச்சித்தாய் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்டப் பொறியாளா் செந்தில்குமாா், இளநிலைப் பொறியாளா் சிவசண்முகநாதன், பழையகாயல் ஊராட்சித் தலைவா் செல்வக்குமாா், காங்கிரஸ் கட்சியின் ஸ்ரீவைகுண்டம் வட்டாரத் தலைவா் தாசன், திமுக ஒன்றியச் செயலா் கோட்டாகிரஸ், வட்டாரச் செயலா்கள் வேம்புதுரை, லெட்சுமணன், துணைத் தலைவா் தா்ம­லிங்கம், கிளைத் தலைவா் சிவனனைந்த பெருமாள், திமுக கிளைச்செயலா் சுதா்சன், ஒன்றியப் பிரதிநிதி முனியசாமி, காங்கிரஸ் ஓபிசி பிரிவு நிா்வாகி பிஸ்மி சுல்தான் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT