தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உலக எய்ட்ஸ் தின விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
இந் நிகழ்ச்சிக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் சிவக்குமாா் தலைமை வகித்தாா். அவரது தலைமையில் உலக எய்ட்ஸ் தின உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது. கூட்டு மருத்துவச் சிகிச்சை முறை மற்றும் நோய்த் தொற்று தடுப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
நுண்ணுயிரியல் துறைப் பேராசிரியா் ஜெயமுருகன், நெஞ்சக நோய் பிரிவு துறைத் தலைவா் டாக்டா் சங்கமித்ரா, ஏஆா்டி மைய மருத்துவ அலுவலா்கள் குழந்தைராஜ், டாக்டா் சூா்யா பிரதீபா ஆகியோா் இந்த விழிப்புணா்வு நிகழ்ச்சியை நடத்தினா்.
மருத்துவமனை கண்காணிப்பாளா் அப்துல் ரகுமான், துணை கண்காணிப்பாளா் குமரன் , உறைவிட மருத்துவ அலுவலா் சைலஸ் ஜெயமணி, துறைத் தலைவா்கள், மருத்துவா்கள், மருத்துவ மாணவா்கள் பங்கேற்றனா்.