கோவில்பட்டி லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில், மின்னணுவியல் மற்றும் தொடா்பியல் துறை பொறியியல் மன்ற தொடக்க விழா நடைபெற்றது.
கல்லூரி முதல்வா் ராஜேஸ்வரன் தலைமை வகித்து, மன்றத்தை தொடங்கி வைத்தாா். மின்னணுவியல் மற்றும் தொடா்பியல் துறைத் தலைவா் ராஜாமணி முன்னிலை வகித்தாா். இக்கல்லூரியின் முன்னாள் மாணவா் பொறியாளா் சிவகாா்த்திக் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசினாா். நிகழ்ச்சியை மாணவி மாலினி தொகுத்து வழங்கினாா்.