ஆறுமுகனேரி காந்தி மைதானத்தில் உள்ள அறிவுத் திருக்கோயில் மனவளக்கலை யோகா மையத்தில் வேதாத்திரி மகரிஷியின் 112ஆவது பிறந்த நாள் விழா நடைபெற்றது.
செங்கோட்டை விஜயலட்சுமி தலைமை வகித்தாா். சிறப்பு தியானம், சிறப்பு சிந்தனை, தன ஆகா்ஷன சங்கல்ப ஆராதனை, குரு பற்றி சிறப்பு சிந்தனை ஆகியவை நடைபெற்றன.
நிகழ்ச்சியில் பெண்கள் உள்ளிட்ட திரளானோா் பங்கேற்றனா். ஏற்பாடுகளை மனவளக்கலை மன்றப் பொறுப்பாசிரியா் சுப்பிரமணியன், விஜிலா ஆகியோா் செய்திருந்தனா்.