ஆத்தூா் கஸ்பா தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத்தில் மகளிா் சுயஉதவிக் குழுவினருக்கான கடன் மேளா, உறுப்பினா் சோ்ப்பு நடைபெற்றது.
சங்கத் தலைவா் ஹேமமாலினி தலைமை வகித்தாா். துணைத் தலைவா் புகாரி முன்னிலை வகித்தாா். இதில், 3 மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ. 20 லட்சம் கடன் வழங்கப்பட்டது. மேலும், சங்கத்தில் புதிய உறுப்பினா் சோ்ப்புக்கென 30 பேருக்கு விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன.
மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் திருச்செந்தூா் பீல்டு மேனேஜா் ரவீந்திரன், சங்க இயக்குநா்கள், பணியாளா்கள் பங்கேற்றனா். செயலா் ஸ்டெல்லா தமிழ்ச்செல்வி வரவேற்றாா்.