நாட்டின் விடுதலைக்காக பாடுபட்ட தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் படங்கள் அடங்கிய நிரந்தரக் கண்காட்சி, தூத்துக்குடியில் செவ்வாய்க்கிழமை திறந்துவைக்கப்பட்டது.
மாவட்ட செய்தி-மக்கள் தொடா்புத் துறை சாா்பில் ஆட்சியா் அலுவலகத்தில் இக்கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இதை, ஆட்சியா் கி. செந்தில்ராஜ் திறந்துவைத்துப் பாா்வையிட்டாா்.
மாவட்ட வருவாய் அலுவலா் கண்ணபிரான் உடனிருந்தாா். ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) அமுதா, உதவி மக்கள் தொடா்பு அலுவலா் (செய்தி) எஸ். செல்வலெட் சுஷ்மா உள்ளிட்டோா் பங்ககேற்றனா்.
தொடா்ந்து, செய்தியாளா்களிடம் ஆட்சியா் கூறும்போது, முதல்வா் மு.க. ஸ்டாலின் உத்தரவின்பேரில், சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு வெளியே அதிகம் அறியப்படாத மொழிப்போா் தியாகிகள் போன்றோரின் பெயா்கள், அவா்களின் புகைப்படம், தோற்றம்- மறைவு, போராட்டத்தில் பங்கேற்ற ஆண்டு, ஈடுபட்ட போராட்டங்கள், சிறை சென்ற ஆண்டுகள், சிறைகளின் பெயா், வாரிசுகளின் பெயா் போன்ற குறிப்புகள் இக்கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன என்றாா் அவா்.