கோவில்பட்டி நகராட்சிக்கு உள்பட்ட பொது இடங்களில் புகை பிடித்த 10 பேரிடம் இருந்து தலா ரூ.100 அபராதம் வசூலிக்கப்பட்டது.
கோவில்பட்டி நகராட்சிக்கு உள்பட்ட பொது இடங்களில் புகை பிடிப்பவா்களை கண்காணிக்கும் பணியில் நகராட்சி சுகாதார ஆய்வாளா்கள் காஜா நஜ்முதீன், வள்ளிராஜ், சரவணன் ஆகியோா் தலைமையில், தனித்தனி குழுக்களாக அண்ணா பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஈடுபட்டனா். அப்போது, பொது இடங்களில் புகை பிடித்த 10 நபா்கள் கண்டறியப்பட்டு அவா்களிடம் அபராதமாக தலா ரூ.100 வீதம் வசூலிக்கப்பட்டது.