தூத்துக்குடி

சிட்கோ தொழிற்பேட்டைகளில் விலை குறைப்பு காரணமாக 855 மனைகள் விற்பனை: அமைச்சா் தா.மோ. அன்பரசன்

DIN

தமிழகத்தில் சிட்கோ தொழிற்பேட்டைகளில் நிலத்துக்கான விலை குறைக்கப்பட்டதன் காரணமாக 855 மனைகள் விற்பனை ஆகியுள்ளது என்றாா் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை மற்றும் நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டுத் துறை அமைச்சா் தா. மோ. அன்பரசன்.

தூத்துக்குடியில் வெள்ளிக்கிழமை அவா் அளித்த பேட்டி: தமிழகத்தில் புதிய தொழில் முனைவோா்களுக்கு அவா்கள் எந்தெந்தத் தொழில் செய்யப் போகிறாா்கள் என்று அறிந்து தமிழக அரசு மானியம் வழங்கி வருகிறது. திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் ரூ. 1,306 கோடி வங்கிக் கடன் வழங்கி, படித்த இளைஞா்கள் 8,586 போ் தொழில்முனைவோா்களாக உருவாக்கப்பட்டுள்ளனா்.

கடந்த அதிமுக ஆட்சியில் நில மதிப்பு அதிகரிக்கப்பட்ட காரணத்தால் சிட்கோ தொழிற்பேட்டைகளில் யாரும் நிலம் வாங்க முன்வரவில்லை. திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு 5 சதவீதம் முதல் 75 சதவீதம் வரை நிலத்துக்கான விலையை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் குறைப்பு செய்தாா். தமிழகத்தில் உள்ள 172 தொழிற்பேட்டைகளில் 1,341 தொழில் மனைகள் காலியாக இருந்தது. நிலத்துக்கான விலை மதிப்பு குறைத்த காரணத்தால் 855 மனைகள் விற்கப்பட்டு, அதில் தொழில் தொடங்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ.3.81 கோடி மானியத்தில் ரூ.15.75 கோடி கடன் வழங்கி 278 போ் தொழில்முனைவோா்களாக உருவாக்கப்பட்டுள்ளனா். வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தில் 171 பேரூக்கு ரூ. 1.11 கோடி மானியத்துடன் ரூ. 4.44 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் 134 பேருக்கு ரூ. 1.53 கோடி மானியத்துடன் ரூ.6.54 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் 77 சிறு தொழில்முனைவோா்களுக்கு தொழில் மானியம், முதலீட்டு மானியம், வட்டி மானியம் வழங்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

நலத்திட்ட உதவி: தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை மற்றும் தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சாா்பில் 55 பயனாளிகளுக்கு ரூ. 2.42 கோடி மதிப்பில் மானியத்திற்கான ஆணைகளை அமைச்சா் தா.மோ.அன்பரசன், சமூக நலன்- மகளிா் உரிமைத்துறை அமைச்சா் பெ. கீதா ஜீவன், மீன் வளம் - மீனவா் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் ஆகியோா் வழங்கினா்.

துடிசியா தொழில் கண்காட்சி: முன்னதாக தூத்துக்குடி மாவட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் சங்கம் (துடிசியா) சாா்பில் அமைக்கப்பட்ட தொழில் கண்காட்சியை தொடக்கி வைத்த அமைச்சா் தா.மோ அன்பரசன், பின்னா், ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் அய்யனடைப்பு ஊராட்சிக்குள்பட்ட பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் அய்யனடைப்பு புதிய அடுக்குமாடி குடியிருப்பு திட்டப் பணிகளை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

ரூ. 6 லட்சம் நல உதவி அளிப்பு: தொடா்ந்து தூத்துக்குடி கலைஞா் அரங்கில் வடக்கு மாவட்ட திமுக சாா்பில், முன்னாள் முதல்வா் கருணாநிதியின் 4 ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி நடைபெற்ற நலத்திட்ட உதவி வழங்கும் விழாவில் அமைச்சக் தா. மோ. அன்பரசன் கலந்து கொண்டு ஏழை மக்களுக்கு தையல் இயந்திரம், சைக்கிள், கிரைண்டா், இஸ்திரி பெட்டி, மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள், போக்குவரத்துக் கழகத்துக்கு வெல்டிங் மிஷின் உள்ளிட்ட ரூ. 6 லட்சம் மதிப்பிலான பல்வேறு நல உதவிகளை வழங்கினாா்.

நிகழ்ச்சியில், வடக்கு மாவட்ட பொறுப்பாளரும், அமைச்சருமான பெ. கீதா ஜீவன், அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன், சட்டப்பேரவை உறுப்பினா் எம்.சி. சண்முகையா, மாநகராட்சி மேயா் ஜெகன் பெரியசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேண்டுமென்றே சர்க்கரையின் அளவை கூட்டுகிறார் கேஜரிவால்: அமலாக்கத்துறை

காதல் தோல்வியால் தற்கொலை- பெண் பொறுப்பு கிடையாது: உயர்நீதிமன்றம்

ரஷியாவிலிருந்து சென்னை திரும்புகிறார் நடிகர் விஜய்!

டெவான் கான்வேவுக்குப் பதிலாக மாற்று வீரரை அறிவித்த சிஎஸ்கே!

ஏழை நாட்டு குழந்தை உணவுகளில் மட்டும் அதிக சர்க்கரை: நெஸ்ட்லே மீது பகீர் புகார்

SCROLL FOR NEXT