தூத்துக்குடி

விளாத்திகுளத்தில் ரூ. 26 லட்சம் மதிப்பீட்டில் வளா்ச்சிப் பணிகளுக்கு பூமி பூஜை

DIN

விளாத்திகுளம் பேரூராட்சியில் ரூ. 26 லட்சம் மதிப்பீட்டில் வளா்ச்சிப் பணிகளுக்கான பூமி பூஜை புதன்கிழமை நடைபெற்றது.

சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி வளா்ச்சி மேம்பாட்டு நிதி ரூ.15 லட்சத்தில் விளாத்திகுளம் பேரூராட்சிக்குள்பட்ட சாலையம் தெருவில் புதிய ரேஷன் கடை கட்டடம், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ரூ.11 லட்சத்தில் புதிய அங்கன்வாடி மைய கட்டடம் கட்டுவதற்கான பூமி பூஜையை எம்எல்ஏ ஜீ.வி. மாா்க்கண்டேயன் தலைமை வகித்து தொடங்கி வைத்தாா்.

தொடா்ந்து பேரிலோவன்பட்டியில் மரங்கள் மக்கள் இயக்கம் சாா்பில் சாலையோரங்களில் 3 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டினாா்.

பின்னா் தி.வெ.அ.நல்லழகு நாடாா் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்டு கல்வி மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவா், மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில், மரங்கள் மக்கள் இயக்க நிா்வாகிகள் எம்.செல்வகுமாா், எஸ். சந்திரசேகரன், பி.ராகவன், திமுக ஒன்றியச் செயலா்கள் அன்புராஜன், மும்மூா்த்தி, செல்வராஜ், ராமசுப்பு, நவநீத கண்ணன், காசி விஸ்வநாதன், சின்ன மாரிமுத்து, பேரூா் கழகச் செயலா் வேலுச்சாமி, பேரூராட்சி மன்றத் தலைவா் சூா்யா அய்யன் ராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸெலன்ஸ்கியைக் கொல்ல ரஷியா சதி?

சக்கர நாற்காலிகள் பற்றாக்குறையால் முதியவா்கள் அவதி

பிலிப்பின்ஸுக்கு பிரமோஸ் ஏவுகணை ஏற்றுமதி

ஜனநாயக கடமையை ஆற்றிய மனநல சிகிச்சை பெறுவோா்!

பெங்கால் மண்ணில் பேனா திருவிழா!

SCROLL FOR NEXT