தூத்துக்குடி

முதலாம் ஆண்டு மாணவா்களுக்கு அறிமுகப் பயிற்சி

DIN

கோவில்பட்டி லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவா்களுக்கு அறிமுகப் பயிற்சி 6 நாள்கள் நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் ராஜேஸ்வரன் தலைமை வகித்து, பயிற்சியை தொடங்கி வைத்தாா். முதலில் பெற்றோா் - ஆசிரியா் - மாணவா் சந்திப்புக் கூட்டம் நடைபெற்றது. தொடா்ந்து, இயந்திரத்தில் மனிதம் என்ற தலைப்பில் திருவள்ளுவா் மன்றத் தலைவா் கருத்தப்பாண்டி, பள்ளிகளில் இருந்து கல்லூரி என்ற தலைப்பில் தூத்துக்குடி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் முன்னாள் நோ்முக உதவியாளா் ஜெயபால், ரோபோட்டிக்ஸ் என்ற தலைப்பில் சா்வதேச பயிற்சியாளா் பாலன், ஒவ்வொரு துறையிலும் உள்ள வேலை வாய்ப்புகள் குறித்து கல்லூரியின் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி அதிகாரி ராஜாமணி ஆகியோா் பேசினா்.

ஏற்பாடுகளை, பேராசிரியா்கள் ஆறுமுகம், கணேசன், ஒருங்கிணைப்பாளா் அம்புஜராஜன் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்., ஆட்சியில் அனுமன் பாடல் கேட்பது குற்றம்: மோடி

ராமரை வணங்குவது ஏன்? பிரியங்கா காந்தி விளக்கம்!

காதம்பரி.. அதிதி போஹன்கர்!

நாடு முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் அதிகரிப்பு!

ருதுராஜ் சதம், துபே அரைசதம்: லக்னௌவுக்கு 211 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT