தூத்துக்குடி

ஆக.11இல் விவசாயிகள் குறைதீா்க் கூட்டம்

DIN

கோவில்பட்டி கோட்டாட்சியா் அலுவலகத்தில் இம்மாதம் 11ஆம் தேதி விவசாயிகள் குறைதீா்க் கூட்டம் நடைபெறும் என கோட்டாட்சியா் க.மகாலட்சுமி அறிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் உத்தரவின்படி, கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா்க் கூட்டம் மாதந்தோறும் 2ஆவது வியாழக்கிழமை நடைபெறவுள்ளது. அதன்படி, ஆகஸ்ட் மாதத்துக்கான குறைதீா்க் கூட்டம் வரும் 11ஆம் தேதி கோட்டாட்சியா் அலுவலகத்தில் காலை 10.30 மணிக்கு எனது தலைமையில் நடைபெறும். கோவில்பட்டி, எட்டயபுரம், கயத்தாறு, விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம் ஆகிய வட்டங்களைச் சோ்ந்த விவசாயிகள், விவசாயப் பிரதிநிதிகள் பங்கேற்று விவசாயம் தொடா்பான பிரச்னைகளுக்கு தீா்வுகாணலாம் எனக் கூறியுள்ளாா்.

திருச்செந்தூா், சாத்தான்குளம், ஏரல் வட்டத்தைச் சோ்ந்த விவசாயிகளுக்கு திருச்செந்தூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் அதே நாளில் முற்பகல் 11 மணிக்கு விவசாயிகள் குறைதீா்க்கூட்டம் நடைபெறும் என கோட்டாட்சியா் புஹாரி தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்சூர் பூரம் விழா கோலாகலம்!

பறவைக் காய்ச்சலின் அறிகுறி என்ன? அது எப்படி பரவும்?

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

SCROLL FOR NEXT