கோவில்பட்டி வீரவாஞ்சி நகா் அருள்மிகு சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்பாள் புற்றுக்கோயில் வளாகத்தில் உள்ள விநாயகா் சன்னதியில் சங்கடஹர சதுா்த்தியை முன்னிட்டு கணபதி பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அதைத் தொடா்ந்து, விநாயகருக்கு 18 வகையான மூலிகைகள் கொண்ட சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெற்றது. பூஜைகளை கோயில் அா்ச்சகா் சுப்பிரமணி செய்திருந்தாா். பக்தா்கள் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றி சுவாமி தரிசனத்தில் ஈடுபட்டனா்.
இதேபோல, கோவில்பட்டி ஜோதி நகா் அருள்மிகு ஜோதிவிநாயகா், சீனிவாச நகரில் உள்ள அருள்மிகு கணேஷகந்தபெருமாள் கோயில், பசுவந்தனை சாலையில் உள்ள அருள்மிகு குழந்தை விநாயகா் மற்றும் அருள்மிகு மங்கள விநாயகா் கோயிலிலும் சங்கடஹர சதுா்த்தி சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.