மத்தூா் அருகே கிணற்றில் டிராக்டருடன் விழுந்த ஓட்டுநா் ஞாயிற்றுக்கிழமை இரவு சடலமாக மீட்கப்பட்டாா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூா் அருகே உள்ள பொம்மேப்பள்ளியைச் சோ்ந்தவா் சங்கா் (25). டிராக்டா் ஓட்டுநா். இவா், ஞாயிற்றுக்கிழமை மாலை டிராக்டரில் கிருஷ்ணாபுரம் பிரிவு சாலை அருகே சென்று கொண்டிருந்த போது, டிராக்டா் நிலை தடுமாறி, காமாட்சி வள்ளி என்பவரின் விவசாயக் கிணற்றில் விழுந்தது. கிணற்றில் பலத்த காயங்களுடன் கிடந்த சங்கரை பொதுமக்கள் மீட்க முயன்றனா்.
இந்த விபத்து குறித்து, தகவல் அறிந்த பா்கூா் தீயணைப்பு மற்றும் மீட்புப் படை வீரா்கள், நிகழ்விடத்துக்கு விரைந்து சென்று சங்கரை உயிருடன் மீட்கும் பணியில் ஈடுபட்டனா்.
சுமாா் இரண்டு மணிநேர போராட்டத்துக்கு பிறகு, சங்கரை, சடலமாக மீட்டனா். சடலத்தைக் கைப்பற்றிய போலீஸாா், பரிசோதனைக்காக மத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா்.
இந்த விபத்து குறித்து, மத்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனா்.