தூத்துக்குடி

திருச்செந்தூரில் இந்து சமய தொழில்நுட்பக் கல்லூரி தொடங்க வலியுறுத்தல்

DIN

திருச்செந்தூரில் இந்துசமய தொழில்நுட்பக் கல்லூரி தொடங்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.

திருச்செந்தூா் ஒன்றியக் கிளையின் 11ஆவது மாநாட்டுக்கு கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினா் சு.பன்னீா்செல்வம் கொடியேற்றினாா். மாநாட்டு தலைமை குழு உறுப்பினா்கள் ஆ.சந்திரசேகா், பெ.தமிழ்ச்செல்வன், கலைச்செல்வி ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநாட்டை மாவட்டச் செயற்குழு உறுப்பினா் ஆா்.ரசல் தொடங்கி வைத்தாா்.

தீா்மானங்கள்: திருச்செந்தூரில் இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் தொழில்நுட்பக் கல்லூரி அமைக்க வேண்டும்; அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவா்கள், மருந்தாளுநா்கள், செவிலியா்களை நியமிக்க வேண்டும்; நான்கு ரத வீதிகளிலும் அமைக்கப்பட்டு வரும் சாலைப் பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கட்சியின் மாவட்டச் செயலா் கே.எஸ்.அா்ஜுனன் நிறைவுரை ஆற்றினாா். புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா். ஒன்றியச் செயலராக முத்துக்குமாா், ஒன்றிய கமிட்டி உறுப்பினா்களாக பெ.கணேசன், அன்பழகன், பெ.தமிழ்ச்செல்வன், சிவதாணுதாஸ், கலைச்செல்வி, சுரேஷ், ராஜேஸ்வரன் உள்ளிட்டோா் தோ்வு செய்யப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

IPL 2024 - முதல் வெற்றியை ருசிக்குமா தில்லி?

வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியவர் மருத்துமனையில் அனுமதி!

உனது அர்ப்பணிப்புக்கு ஈடு இணையே இல்லை: கணவரைப் புகழ்ந்த மனைவி!

பஞ்சாப் முதல்வருக்கு பெண் குழந்தை!

‘உன்ன நினைச்சதும்’.. சித்தி இத்னானி!

SCROLL FOR NEXT