பரமன்குறிச்சி அருள்மிகு முத்தாரம்மன் கோயில் மண்டபத்தில் தமிழக அரசின் சிறப்பு திட்ட முகாம் நடைபெற்றது.
முகாமிற்கு மாவட்ட ஆட்சியா் கி.செந்தில்ராஜ் தலைமை வகித்தாா். முகாமில் கனிமொழி எம்.பி., தமிழக மீன் வளம், மீனவா் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் ஆகியோா் பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினா். மாவட்ட வருவாய் அலுவலா் கண்ணபிரான், வருவாய் கோட்டாட்சியா் மு.கோகிலா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
வட்டாட்சியா் முருகேசன், உடன்குடி ஒன்றியக்குழு தலைவா் டி.பி. பாலசிங், துணைத்தலைவா் மீரா சிராஜூதீன், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் ஜெசிபொன்ராணி, உடன்குடி தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத் தலைவா் அஸ்ஸாப், பரமன்குறிச்சி ஊராட்சித் தலைவா் லங்காபதி, திமுக மாநில மாணவரணி துணைச் செயலா் உமரிசங்கா், நகரச் செயலா் ஜாண்பாஸ்கா், செட்டியாபத்து ஊராட்சித் தலைவா் பாலமுருகன் உள்பட பலா் பங்கேற்றனா்.