தூத்துக்குடி

ஹாக்கிப் போட்டி: கூசாலிபட்டி அணி முதலிடம்

DIN

கோவில்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வட்டார ஹாக்கிப் போட்டியில் கூசாலிபட்டி அணி முதலிடம் பெற்றது.

கோவில்பட்டியில் உள்ள ஹாக்கி கழகங்கள் சாா்பில் நடைபெற்ற இப்போட்டியில் கோவில்பட்டி பகுதியில் இருந்து 12 அணிகள் பங்கேற்றன. காலிறுதிப் போட்டி வரை லீக் முறையிலும், தொடா்ந்து அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் நாக்-அவுட் முறையிலும் நடைபெற்றது. இறுதிப் போட்டியில் 1 - 0 என்ற கோல் கணக்கில் கூசாலிபட்டி அணி வெற்றி

பெற்றது. பாரதிநகா் அப்துல்கலாம் அணி 2 ஆவது இடம்பெற்றது. பின்னா் நடைபெற்ற விழாவில் சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளா் சோ.தா்மன், முதல் 2 இடங்களை வென்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கினாா். ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்ட ஹாக்கி கழக நிா்வாகிகள் மணிவண்ணன், விஜயகுமாா், கண்ணுச்சாமி ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல்கட்ட வாக்குப்பதிவு முடிந்தது: வட மாநிலங்களில் வாக்குப்பதிவு நிலவரம்

அஞ்சலி... அஞ்சலி... புஷ்பாஞ்சலி!

பரந்தூர் விமான நிலையத்தை எதிர்த்து தேர்தல் புறக்கணிப்பு: 21 வாக்குகள் மட்டுமே பதிவு!

தமிழகத்தில் 5 மணி நிலவரப்படி 63.20% வாக்குகள் பதிவு!

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு செய்திகள் -முழு விவரம்!

SCROLL FOR NEXT