கோவில்பட்டி துணை மின் நிலையத்திற்குள்பட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (அக். 26) மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது.
இதுகுறித்து, கோவில்பட்டி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளா் எம்.சகா்பான் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கோவில்பட்டி துணை மின் நிலையத்துக்குள்பட்ட மாா்க்கெட் ரோடு பகுதியில் 2 புதிய மின்மாற்றி அமைப்பதற்கான பணி செவ்வாய்க்கிழமை (அக். 26) நடைபெறவுள்ளதால், கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையம், பயணியா் விடுதி, சரமாரியம்மன் கோயில் தெரு, மாா்க்கெட் சாலை, கிருஷ்ணன் கோயில் சுற்றுப்பகுதி, பண்ணைத் தோட்டம் தெரு ஆகிய பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மின் விநியோகம் இருக்காது என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.