கூட்டுறவு சங்க மோசடியை கண்டித்து, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் குரும்பூரில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
நகரச் செயலா் தங்கராஜ் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் அா்ச்சுணன் கலந்துகொண்டு பேசினாா்.
இதில், மாவட்டச் செயற்குழு சண்முகராஜ், ஒன்றியச் செயலா் ரவிச்சந்திரன், கமிட்டி உறுப்பினா்கள் ராமச்சந்திரன், குமரகுருபரன், சந்திரசேகா், திருக்காளத்தி, மூத்த தலைவா் தேவராம், கிளைச் செயலா்கள் கசமுத்து, சாதுலிங்கம், முத்தையா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.