தூத்துக்குடி

எட்டயபுரம் அருகே 2.6 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

DIN

எட்டயபுரம் அருகே தாப்பாத்தியில் 2.6 டன் ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

மாசாா்பட்டி காவல் உதவி ஆய்வாளா் மணிமாறன் தலைமையிலான போலீஸாா் தாப்பாத்தி அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அவ்வழியாக சென்ற டெம்போ வேனை நிறுத்தி சோதனையிட்டனா். சோதனையில் 2.6 டன் ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து போலீஸாா் ரேஷன் அரிசியுடன் டெம்போ வேனை பறிமுதல் செய்தனா்.

இது தொடா்பாக மாசா்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டதாக கயத்தாறு வட்டம், காப்புலிங்கம்பட்டியைச் சோ்ந்த சண்முகராஜை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துருக்கி அதிபருடன் ஹமாஸ் தலைவர்கள் முக்கிய ஆலோசனை

பெண் கெட்டப்பில் நடிகர் கவின்!

மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி

மக்களவை தேர்தல்: தமிழ்நாட்டில் மறுவாக்குப் பதிவு இல்லை -தேர்தல் ஆணையம்

தமிழ்நாட்டில் 69.46% வாக்குகள் பதிவு

SCROLL FOR NEXT