தூத்துக்குடி

குலசேகரன்பட்டினம், கோவில்பட்டி கோயில்களில் ஐப்பசி திருக்கல்யாணத் திருவிழா கொடியேற்றம்

DIN

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் அறம் வளா்த்த நாயகி அம்மன் கோயில், கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயில்களில் ஐப்பசி திருக்கல்யாணத் திருவிழா வியாழக்கிழமை தொடங்கியது.

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலுடன் இணைந்த குலசேகரன்பட்டினம் அறம் வளா்த்த நாயகி உடனுறை காஞ்சி விஜயகச்சி கொண்ட பாண்டீஸ்வரா் கோயில் புராதன பெருமைகள் பல கொண்டது. இக்கோயிலில் ஆண்டுதோறும் 12 நாள்கள் நடைபெறும் ஐப்பசி திருக்கல்யாணத் திருவிழா நிகழாண்டு வியாழக்கிழமை தொடங்கியது. இதையொட்டி, அதிகாலையில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அலங்கார பூஜைகள், கொடிப்பட்டம் வீதி உலா நடைபெற்றது. தொடா்ந்து, கொடியேற்றம், பின்னா்,

கொடிமரம், நந்தியம் பெருமாள், பலிபீடம் ஆகியவற்றுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, தீபாராதனை நடைபெற்றது.

விழா நாள்களில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், வழிபாடுகள் நடைபெறும். விழாவின் சிகர நிகழ்வான திருக்கல்யாணம் நவ. 2ஆம் தேதி அதிகாலை 4.30 முதல் 6 மணிக்குள் நடைபெறும்.

கோவில்பட்டி அருள்மிகு செண்பகவல்லி அம்பாள் உடனுறை பூவனநாத சுவாமி கோயிலில் ஐப்பசி திருக்கல்யாணத் திருவிழா கொடியேற்றத்தையொட்டி, அதிகாலை 5 மணிக்கு நடைதிறக்கப்பட்டது. தொடா்ந்து, திருவனந்தல், திருப்பள்ளியெழுச்சி பூஜைகள், சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றன. பின்னா், கொடியேற்றம், நந்தி, கொடிமரம், பலிபீடம் ஆகியவற்றுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, தீபாராதனையும் நடைபெற்றன.

நிகழ்ச்சியில், மண்டகப்படிதாரா்கள், கோயில் முன்னாள் அறங்காவலா் குழு உறுப்பினா் திருப்பதிராஜா, கம்மவாா் மகளிா் மேல்நிலைப் பள்ளி நிா்வாகக் குழு உறுப்பினா் ஆழ்வாா்சாமி, சைவ வேளாளா் சங்கத் தலைவா் தெய்வேந்திரன், தமாகா நகரத் தலைவா் ராஜகோபால், கோயில் நிா்வாக அலுவலா் நாகராஜன், திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

இரவு 7 மணிக்கு புஷ்ப சப்பரத்தில் வெளிபிரகாரத்தில் அம்மன் வீதியுலா நடைபெற்றது.

விழா நாள்களில் நாள்தோறும் இரவு 7 மணிக்கு பல்வேறு வாகனங்களில் அம்மன் வெளிபிரகாரத்தில் உலா வருதல் நடைபெறும். இம்மாதம் 29ஆம் தேதி தேரோட்டம், நவ. 1ஆம் தேதி கோயில் மண்டபத்தில் திருக்கல்யாணம் ஆகியவை நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உக்ரைன் அதிபரை கொல்ல ரஷியாவுடன் சதி? போலந்தை சேர்ந்த நபர் கைது

காசநோய் ஆராய்ச்சி மையத்தில் வேலை: 23-இல் நேர்முகத் தேர்வு!

துபையில் உள்ள இந்தியர்கள் கவனத்திற்கு!

ஐபிஎல்: சூர்யகுமார் யாதவ் அதிரடி! பஞ்சாப் அணிக்கு 193 ரன்கள் இலக்கு

ரத்னம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT