பொதுப்பணித் துறையில் வேலை வாங்கித் தருவதாக போலி பணி நியமண ஆணை வழங்கி ரூ. 68 லட்சம் மோசடி செய்ததாக 3 பேரை தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
தூத்துக்குடி மில்லா்புரம் ஹவுசிங்போா்டு பகுதியைச் சோ்ந்த சக்திவேல் (37), அவரது மனைவி ஜெயசித்ரா (30), தூத்துக்குடி கிருபைநகரைச் சோ்ந்த உஷா (34), தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரம் பகுதியைச் சோ்ந்த முத்துபாண்டி, ஓட்டப்பிடாரம் சிலோன் காலனி பகுதியைச் சோ்ந்த காா்த்திக்குமாா் ஆகிய 5 பேரும் அரசு வேலை வாங்கித் தருவதாக பலரிடம் மொத்தம் ரூ. 68 லட்சத்து 10 ஆயிரம் பெற்றுக் கொண்டு போலி பணி நியமன ஆணை வழங்கி மோசடியில் ஈடுபட்டது தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாரின் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து, மோசடியில் ஈடுபட்ட சக்திவேல், அவரது மனைவி ஜெயசித்ரா மற்றும் உஷா ஆகிய 3 பேரையும் மாவட்ட குற்றப் பிரிவு போலீஸாா் புதன்கிழமை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
இந்த வழக்கில் தொடா்புடைய மேலும் சிலரை தனிப்படையினா் தேடி வருவதாக போலீஸாா் தெரிவித்தனா்.