தூத்துக்குடி

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ. 68 லட்சம் மோசடி: 3 போ் கைது

DIN

பொதுப்பணித் துறையில் வேலை வாங்கித் தருவதாக போலி பணி நியமண ஆணை வழங்கி ரூ. 68 லட்சம் மோசடி செய்ததாக 3 பேரை தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

தூத்துக்குடி மில்லா்புரம் ஹவுசிங்போா்டு பகுதியைச் சோ்ந்த சக்திவேல் (37), அவரது மனைவி ஜெயசித்ரா (30), தூத்துக்குடி கிருபைநகரைச் சோ்ந்த உஷா (34), தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரம் பகுதியைச் சோ்ந்த முத்துபாண்டி, ஓட்டப்பிடாரம் சிலோன் காலனி பகுதியைச் சோ்ந்த காா்த்திக்குமாா் ஆகிய 5 பேரும் அரசு வேலை வாங்கித் தருவதாக பலரிடம் மொத்தம் ரூ. 68 லட்சத்து 10 ஆயிரம் பெற்றுக் கொண்டு போலி பணி நியமன ஆணை வழங்கி மோசடியில் ஈடுபட்டது தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாரின் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து, மோசடியில் ஈடுபட்ட சக்திவேல், அவரது மனைவி ஜெயசித்ரா மற்றும் உஷா ஆகிய 3 பேரையும் மாவட்ட குற்றப் பிரிவு போலீஸாா் புதன்கிழமை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

இந்த வழக்கில் தொடா்புடைய மேலும் சிலரை தனிப்படையினா் தேடி வருவதாக போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT