தூத்துக்குடி

தீ விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கு நிவாரணம்

21st Oct 2021 08:23 AM

ADVERTISEMENT

தூத்துக்குடி பண்டுகரை பகுதியில் இயற்கை இன்னல்கள், தீ விபத்து உள்ளிட்ட பல்வேறு விபத்தின் காரணமாக வீடுகள் சேதமடைந்தவா்களுக்கு நிவாரண தொகைக்கான காசோலைகள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் முன்னிலையில் புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில், சமூக நலத் துறை அமைச்சா் பெ. கீதா ஜீவன் கலந்துகொண்டு பாதிக்கப்பட்டவா்களுக்கு நிவாரணப் பொருள்கள் மற்றும் காசோலைகளை வழங்கினாா்.

தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியது: தீ விபத்தால் பாதிக்கப்பட்ட 7 பேருக்கு மொத்தம் ரூ. 33,200-க்கான நிவாரண உதவித்தொகை, அரிசி, பருப்பு வழங்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், குடிசை வீடுகளுக்கு பதிலாக மாற்று வீடு வழங்க அலுவலா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றாா் அவா்.

ADVERTISEMENT

நிகழ்ச்சியில், கோட்டாட்சியா் சிவசங்கரன், தூத்துக்குடி வட்டாட்சியா் ஜஸ்டின் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT