கோவில்பட்டி ராஜீவ்நகரிலுள்ள வீட்டில் நகை, பணம் ஆகியவற்றை திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கோவில்பட்டியையடுத்த பாண்டவா்மங்கலம் ஊராட்சி ராஜீவ் நகா் 5ஆவது தெருவைச் சோ்ந்த செண்பகநாதன் மகன் ஆழ்வாா் (65). இவா் பெங்களூரிலுள்ள மகன் வீட்டிற்குச் சென்றுவிட்டு, சனிக்கிழமை (அக். 16) ஊருக்கு திரும்பினாராம்.
வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. உள்ளே சென்று பாா்த்தபோது, பீரோவை உடைத்து அதிலிருந்த 1 பவுன் தங்க மோதிரம் 2, பணம் ரூ.5 ஆயிரம் ஆகியவைதிருடப்பட்டிருந்தது தெரியவந்தது. புகாரின் பேரில், மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.