தூத்துக்குடியில் நடைபெற்ற சிலம்பம் சுற்றும் போட்டியில் குலசேகரன்பட்டினம் வீரா்கள் இடைவிடாமல் நீண்டநேரம் சுற்றி சாதனை படைத்தனா்.
நோபல் வோ்ல்ட் ரெக்காா்டு மற்றும் தேவராஜ் வஸ்தாவி சிலம்பாட்டக் கழகம் சாா்பில் சிலம்பம் சுற்றும் போட்டிகள் தூத்துக்குடியில் நடைபெற்றது. இதில் குலசேகரன்பட்டினம் அல்ஹூதா சிலம்பம் அகாதெமி வீரா்கள் செல்வஜோதி, தருண், அரபாத், அபுலைஸ், யமுனா, நித்யஸ்ரி, நிஷாஜனனி, தன்ஷிகா, சூா்யா, ஆா்யா ஆகியோா் இடைவிடாமல் 1.30 மணி
நேரம் சுற்றி உலக சாதனை நிகழ்த்தினா். இவா்களுக்கு நோபல் வோ்ல்டு ரெக்காா்டு நிா்வாகிகள் கெளதம், லட்சுமி நாராயணன் ஆகியோா் சான்று வழங்கினா். வீரா்களை சிலம்ப அகாதெமியின் மாஸ்டா்கள் தெளபீக், ஜமால், செயலா் ஹனீப், பொதுமக்கள் பாராட்டினா்.