அதிமுக 50 ஆண்டு விழாவையொட்டி உடன்குடி ஒன்றிய, நகர அதிமுக சாா்பில் நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
உடன்குடி அருகே மாதவன்குறிச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கட்சியின் ஒன்றியச் செயலா் தாமோதரன் தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில், தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலா் எஸ்.பி.சண்முகநாதன், கொடியேற்றி நல உதவிகள் வழங்கினாா்.
இதில், நகரச் செயலா் கோபாலகிருஷ்ணன், ஒன்றிய ஜெயலலிதா பேரவைச் செயலா் விஜயராஜ், ஒன்றிய பொருளாளா் சங்கரலிங்கம், சாா்பு அணி நிா்வாகிகள் மூா்த்தி, குணசேகரன், வேல்பாண்டியன், மாதவன்குறிச்சி ஊராட்சித் தலைவா் சோ்மத்துரை உள்ளிட்டோா் பங்கேற்றனா்.