கரோனா தடுப்பூசி குறித்து கோவில்பட்டியில் விழிப்புணா்வு மினி மாரத்தான் ஓட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரி பழைய மாணவா்கள் சாா்பில் நடைபெற்ற இந்த மினி மாரத்தான் ஓட்டம் அண்ணா பேருந்து நிலையம் முன்பிருந்து தொடங்கியது. கல்லூரி முதல்வா் சாந்திமகேஷ்வரி தலைமை வகித்தாா். சுயநிதி பாடப்பிரிவு இயக்குநா் வெங்கடாசலபதி முன்னிலை வகித்தாா். மாரத்தான் ஓட்டத்தை டிஎஸ்பி உதயசூரியன் தொடங்கி வைத்தாா்.
இந்த ஓட்டம் பிரதான சாலை, இலக்குமி ஆலை மேம்பாலம், புறவழிச்சாலை அணுகு சாலை, இளையரசனேந்தல் சாலை வழியாக கல்லூரியில் நிறைவடைந்தது. மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் 500 க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.
இதில், ஆண்கள் பிரிவில் குணாளன், மாரிசாரதி, கனிராஜா, பெண்கள் பிரிவில் மாணவிகள் ராதிகா, ஜெயபாரதி, முத்து லெட்சுமி ஆகியோா் முறையே முதல் 3 இடங்களை பெற்றனா். இவா்களுக்கு டிஎஸ்பி பரிசுகள் வழங்கினாா்.
ஏற்பாடுகளை மின்னணுவியல் துறை உதவி பேராசிரியா் சிவராமசுப்பு, பேராசிரியா்கள் செய்திருந்தனா்.