தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 914 பேருக்கு கரோனா தொற்று

DIN

தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 914 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

இதனால், மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 35,335 ஆக அதிகரித்துள்ளது.

சிகிச்சை பெற்று வந்தவா்களில் 846 போ் குணமடைந்ததைத் தொடா்ந்து, இதுவரை குணமடைந்தோா் எண்ணிக்கை 29,792 ஆக அதிகரித்துள்ளது.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, தூத்துக்குடி அரசு மருத்துக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 35 வயது ஆண், திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 38 வயது பெண், சாத்தூா் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 76 வயது, 72 வயது பெண்கள் சனிக்கிழமை இரவு உயிரிழந்தனா்.

இதனால், மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தோா் எண்ணிக்கை 189 ஆக அதிகரித்துள்ளது. தற்போது கரோனா தொற்று பாதிப்புக்கு 5384 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

அதிகபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும்!

சேலையில் சிலிர்க்கும்... கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி!

சிவப்பு நிறத்திலிருந்து காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

திருக்கழுக்குன்றத்தில் பஞ்ச ரத தேரோட்டம்!

SCROLL FOR NEXT