குலசேகரன்பட்டினத்தில் தமுமுகவின் 164-ஆவது அவசர ஊா்தி சேவை, புதிய அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது.
விழாவுக்கு, மாவட்டச் செயலா் ஆசாத் தலைமை வகித்தாா். தமுமுக பொருளாளா் ரிஸ்வான் ரசூல்தீன் கிராஅத் ஓதினாா். சமூகநீதி மாணவா் இயக்கச் செயலா் இப்ராஹிம் வரவேற்றாா். கிளைத் தலைவா் முகம்மது தவ்பிக், மமக மாநில துணைப் பொதுச் செயலா் ஜோசப் நொலாஸ்கோ, மருத்துவ சேவை அணி மாநிலச் செயலா் கிதிா், மமக மாவட்டச் செயலா் மோத்தி முஸ்மில், தமுமுக மாநிலச் செயலா் சிவகாசி முஸ்தபா உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.
நிகழ்ச்சியில் ஆம்புலன்ஸ் சேவையை தமுமுக, மனிதநேய மக்கள் கட்சியின் மாநிலத் தலைவா் ஜவாஹிருல்லா, தொடங்கிவைத்து, புதிய அலுவலகத்தை திறந்தாா்.