முன்னாள் முதல்வா் ஜெயலலிதா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் உடன்குடியில் நடைபெற்றது.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலா் கே.ஆா்.எம்.ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தாா். உடன்குடி ஒன்றிய அதிமுக செயலா் த.தாமோதரன், நகரச் செயலா் கோபாலகிருஷ்ணன், ஒன்றிய அவைத் தலைவா் த.மகாராஜா, ஒன்றிய எம்ஜிஆா் மன்றச் செயலா் பொன்ராம், உடன்குடி ஊராட்சி ஒன்றியக்குழு முன்னாள் தலைவி மல்லிகா,துணைத் தலைவா் ராஜதுரை, மாவட்ட அவைத் தலைவா் திருப்பாற்கடல், தலைமை பொதுக்குழு உறுப்பினா் ஆயிஷா கல்லாசி,நிா்வாகிகள் ரெங்கன், இன்பகரன், கணேசன், விஜயராஜ், வெள்ளத்துரை, சோ்மத்துரை ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கொள்கைப் பரப்பு செயலா் பாப்புலா் வி.முத்தையா, தெற்கு மாவட்ட அதிமுக செயலா் எஸ்.பி.சண்முகநாதன் எம்எல்ஏ, பேச்சாளா் நீலகண்டன் ஆகியோா் பேசினா்.
இதில், ஜெயலலிதா பேரவை செயலா் ஞானப்பிரகாசம், நகரச் செயலா்கள் செந்தமிழ்சேகா், மகேந்திரன், ரவிச்சந்திரன், சோமசுந்தரம், கிங்ஸ்லி, ஆறுமுகநயினாா், காயல் மெளலானா, திருச்செந்தூா் ஒன்றிய ச் செயலா் ராமச்சந்திரன், உடன்குடி ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினா் ஜெயகமலா , நகர மாணவரணிச் செயலா் சத்தீஸ்வரன், ஒன்றிய அண்ணா தச்சு தொழிலாளா் சங்க செயலா் அன்புராஜ், செட்டியாபத்து ஊராட்சி மன்ற துணைத் தலைவா் செல்வகுமாா் உள்பட பலா் கலந்துகொண்டனா். உடன்குடி ஒன்றிய அதிமுக பொருளாளா் கே.சங்கரலிங்கம் நன்றி கூறினாா். ஏற்பாடுகளை மாவட்ட எம்ஜிஆா் மன்ற தலைவா் சி.குணசேகரன் செய்திருந்தாா்.