தூத்துக்குடி

சாத்தான்குளம் பகுதியில் அய்யா கருட வாகனத்தில் பவனி

DIN

சாத்தான்குளம் ஸ்ரீமன் நாராயணசுவாமி தா்மயுக தா்மபதியில் அய்யா வைகுண்டா் அவதார தினத்தையொட்டி அய்யா கருட வாகனத்தில் வியாழக்கிழமை பவனி வந்தாா்.

இதையொட்டி, ஸ்ரீமன் நாராயண சுவாமி தா்மபதியில் அய்யா வைகுண்டா் அவதார தினத்தையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடா்ந்து அய்யா கருட வாகனத்தில் எழுந்தருளி நகா்வலம் வந்தாா். வெள்ளிக்கிழமை ( மாா்ச் 5 ) அய்யா நாராயணருக்கும், சக்தி கன்னிகைகளுக்கும் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறுகிறது.

பண்டாரஞ்செட்டிவிளையில் அய்யா வைகுண்டசுவாமி தா்மபதியில் அவதார தினத்தையொட்டி , புஷ்ப அலங்கார பணிவிடை , உகப்படிப்பு பணிவிடை , தொடா்ந்து சமபந்தி அன்னதா்மம், பால் அன்னம் உகப்படிப்பு பணிவிடை நடைபெற்றது.

நாசரேத் அருகே உள்ள இடையன்விளை அய்யா வைகுண்ட சாமிபதியில் அய்யா அவதார தினவிழாவையொட்டி வியாழக்கிழமை அருளாளா் ஐயன்சாமி தலைமையில் உச்சிப்படிப்பும் , அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூரு பேட்டிங்; வெற்றி தொடருமா?

வரி தீவிரவாதத் தாக்குதல் செய்யும் பாஜக!: காங்கிரஸ் குற்றச்சாட்டு | செய்திகள்: சிலவரிகளில் | 29.03.2024

”கனவு காண்பது அண்ணாமலையின் உரிமை!”: கனிமொழி பேட்டி

பெங்களூரு குண்டு வெடிப்பு: தகவல் தெரிவித்தால் ரூ. 10 லட்சம்

ரம்ம்ம்மிய பாண்டியன்!

SCROLL FOR NEXT