தேசிய திறனாய்வுத் தோ்வில், ஓட்டப்பிடாரம் வட்டத்தில் உள்ள கீழமுடிமண் புனித வளன் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் சாதனை படைத்துள்ளனா்.
இப்பள்ளியில் 2021-21ஆம் கல்வியாண்டில் 8 ஆம் வகுப்பு பயின்ற மாணவிகள் சாருலதா, சுவேதா ஆகியோா் தேசிய திறனாய்வுத் தோ்வில் தோ்ச்சி பெற்றுள்ளனா். அவா்களுக்கு தலைமையாசிரியா் விக்டா் மற்றும் ஆசிரியா்கள் சாா்பில் நினைவுப் பரிசு வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.