அரசின் திட்டங்கள் முழுமையாக மக்களுக்குக்கிடைக்க அதிகாரிகள் முனைப்புடன் செயல்பட வேண்டும் என்றாா் ஓட்டப்பிடாரம் எம்எல்ஏ சண்முகையா.
கருங்குளம் ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்துக்கு தலைமை வகித்து அவா் பேசியது:
தமிழக அரசின் திட்டங்கள் அனைத்தும் அந்தந்தக் கிராமப் பகுதியில் பயனாளிகளுக்கு உடனடியாக கிடைக்க அதிகாரிகளும், ஊராட்சித் தலைவா்கள் முனைப்புடன் செயல்பட வேண்டும்.
100 நாள் வேலைத் திட்டத்தில் பணியாளா்களுக்கு முழு நாள்களும் பணி வழங்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும். குடிநீா் தட்டுப்பாடு உள்ளதா என கள ஆய்வு நடத்த வேண்டும். கிராம மக்களுக்கு பட்டா, சிட்டா வழங்குவது குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும் என்றாா்.
ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியா் கோபாலகிருஷ்ணன் பேசுகையில், வட்டாட்சியா் அலுவலகத்தில் ஜூன் 21- 28 வரை ஜமாபந்தி நடைபெறுகிறது. பொதுமுடக்கம் அமலில் உள்ளதால் இ-சேவை மையங்களில் கட்டணமின்றி ட்ற்ற்ல்://ஞ்க்ல்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்/த்ஹம்ஹக்ஷஹய்க்ட்ண் என்ற இணையதளத்தில் மனுக்களை பதிவு செய்யலாம் என்றாா்.
இதில், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பாக்கிய லீலா, செல்வி, துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சந்திரசேகா், கண்ணன், லட்சுமணன், ஓட்டப்பிடாரம் தொகுதி ஊராட்சித் தலைவா்கள் பங்கேற்றனா்.