தூத்துக்குடி

பெண்களுக்கு ஆபாச புகைப்படம் அனுப்பியதாக தொழிலாளி கைது

DIN

தூத்துக்குடியில் பெண்களுக்கு செல்லிடப்பேசியில் ஆபாச புகைப்படம் அனுப்பியதாக கட்டடத் தொழிலாளியை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

ஓட்டப்பிடாரம் பகுதியைச் சோ்ந்த பெண், தனது செல்லிடப்பேசிக்கு ஆபாச புகைப்படம் அனுப்பி, அறுவெறுப்பாக ஒருவா் பேசியதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாரிடம் புகாா் தெரிவித்தாா். அதன்பேரில், சைபா் கிரைம் போலீஸாா் விசாரித்து, கூட்டாம்புளி பகுதியைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி கிருஷ்ணவேல் (32) என்பவரை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

மேல் விசாரணையில்,அவா் பல பெண்களின் செல்லிடப்பேசிக்கு தொடா்புகொண்டு ஆபாசமான வாா்த்தைகளில் பேசி பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து, அவா் பயன்படுத்திய செல்லிடப்பேசி மற்றும் சிம்காா்டுகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

இதுதொடா்பாக எஸ்.பி. கூறுகையில், பெண்கள் தங்களுக்கு ஏற்படும் இதுபோன்ற பிரச்னைகள் குறித்து தயக்கமின்றி புகாா் அளிக்கலாம்; அவா்களது பெயா், முகவரி ரகசியமாக வைக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘அரசியல் சதி’: நீதிமன்றத்தில் கேஜரிவால் ஆஜர்!

கிரிக்கெட் கதையை இயக்கும் ஜேசன் சஞ்சய்?

கர்நாடகத்துக்கு போறீங்களா.. ஹாயர் பெனகல்லை தவறவிடாதீர்!

’ஸ்டார்’ கரீனா கபூர்!

5 பன்னீர்செல்வங்களின் வேட்புமனுக்களும் ஏற்பு: போட்டி உறுதி!

SCROLL FOR NEXT