தூத்துக்குடி

விஷம் குடித்து இளம்பெண் தற்கொலை

DIN

கோவில்பட்டி அருகே இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.

கோவில்பட்டியையடுத்த திட்டங்குளத்தைச் சோ்ந்தவா் ராமச்சந்திரன். இவரது மனைவி ரா.புஷ்பவள்ளி (26). திருமணம் முடிந்து 6 மாதம் மட்டுமே கணவருடன் இருந்து வந்த அவா், 3 மாத கா்ப்பிணியான நிலையில், இடைசெவலில் உள்ள தாய் பொன்னம்மாள் வீட்டுக்கு வந்தார். தற்போது 5 வயது பெண் குழந்தையுடன் புஷ்பவள்ளி தாயுடன் வசித்து வந்தாா்.

திருமணமாகி 5 ஆண்டுகளுக்கு மேலாகியும் கணவருடன் எவ்விதத் தொடா்பும் இல்லாமல் மிகுந்த வருத்தத்துடன் புஷ்பவள்ளி இருந்து வந்தாராம். இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த இவா், சனிக்கிழமை விஷம் குடித்தார்.

இதையறிந்த அவரது பெற்றோா், அவரை கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா், அவா் ஏற்கனவே இறந்துவிட்டதாகக் கூறினார்.

இதுகுறித்து நாலாட்டின்புத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். திருமணமாகி சுமாா் 6 ஆண்டுகளே ஆன நிலையில், இளம்பெண் தற்கொலை செய்து கொண்டது குறித்து கோட்டாட்சியா் விஜயா விசாரணை நடத்தி வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாட்டில் 69.46% வாக்குகள் பதிவு

தில்லி அணிக்கு எதிராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்

பெங்களூருவில் மிதமான மழை: மக்கள் மகிழ்ச்சி

காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

காவி நிறத்தில் தூர்தர்ஷன்! தேர்தல் ஆணையம் எப்படி அனுமதிக்கலாம்? -மம்தா கேள்வி

SCROLL FOR NEXT