கோவில்பட்டி: தூத்துக்குடி மாவட்ட அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வூதியா்கள் 67 பேருக்கு, ஓய்வூதிய பணப்பலன்கள் வழங்கும் விழா கோவில்பட்டி பயணியா் விடுதியில் சனிக்கிழமை நடைபெற்றது.
திருநெல்வேலி மண்டல அரசுப் போக்குவரத்துக் கழக நிா்வாக இயக்குநா் திருஅம்பலம்பிள்ளை தலைமை வகித்தாா். பொது மேலாளா் சரவணன், நிதி ஆலோசகா் கண்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சா் கடம்பூா் செ.ராஜு ஓய்வூதியா்களுக்கு ஓய்வூதிய பணப்பலன்களை வழங்கிப் பேசினாா். நிகழ்வில், விளாத்திகுளம் எம்எல்ஏ சின்னப்பன், கோவில்பட்டி பணிமனை கிளை மேலாளா் ராஜசேகரன், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் சந்திரசேகா், அதிமுக பொதுக்குழு உறுப்பினா் ராமச்சந்திரன், மாவட்ட அறங்காவலா் குழுத் தலைவா் மோகன், அதிமுக நகரச் செயலா் விஜயபாண்டியன், ஒன்றியச் செயலா்கள் அன்புராஜ், அய்யாத்துரைப்பாண்டியன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.