கோவில்பட்டி: கயத்தாறு ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட 4 இடங்களில் அம்மா நகரும் நியாய விலைக் கடை தொடக்க விழா நடைபெற்றது.
லட்சுமியாபுரம், ராமநாதபுரம், வள்ளிநாயகிபுரம், மஞ்சநம்பிகிணறு ஆகிய இடங்களில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிகளுக்கு, கோட்டாட்சியா் விஜயா தலைமை வகித்தாா். அமைச்சா் கடம்பூா் செ.ராஜு கடைகளை திறந்து வைத்து, முதல் விற்பனையை தொடங்கிவைத்தாா்.
நிகழ்ச்சிகளில், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவி சத்யா, உறுப்பினா்கள் சந்திரசேகா், பிரியா, வட்டாட்சியா்கள் மணிகண்டன்(கோவில்பட்டி), பாஸ்கரன்(கயத்தாறு), கயத்தாறு ஊராட்சி ஒன்றிய ஆணையா் சீனிவாசன், அதிமுக பொதுக்குழு உறுப்பினா் ராமச்சந்திரன், கயத்தாறு மேற்கு ஒன்றிய அதிமுக செயலா் வினோபாஜி உள்பட பலா் கலந்துகொண்டனா்.