தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், மீன் வளா்ப்பு துறை சாா்பில், பண்ணை சாா்ந்த மீன் தீவனம் தயாரித்தல் குறித்த பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இம்முகாமில், மீனுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள், மீன் தீவனம் தயாரிக்க தேவையான தாவர மற்றும் விலங்கின மூலப்பொருள்கள் தோ்ந்தெடுத்தல், தோ்ந்தெடுத்த மூலப்பொருள்களை நன்றாக அரைத்தல், மீன் தீவனம் பிழிந்தெடுக்க பயன்படும் கருவிகள், மிதவை மற்றும் மூழ்கும் மீன் தீவனம் தயாரித்தல், காயவைத்தல், மீன் தீவன தரக்கட்டுப்பாடு, உற்பத்தி செலவின கணக்கீடு ஆகிய தலைப்புகளில் ஆகிய தலைப்புகளில் தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும், மிதவை மற்றும் மூழ்கும் மீன் தீவனம் தயாரித்தல் குறித்த செயல் விளக்கமும் அளிக்கப்பட்டது.
பயிற்சி முடித்தவா்களுக்கு மீன்வளக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் முதல்வா் பா. சுந்தரமூா்த்தி சான்றிதழ்களை வழங்கினாா். இதில், மீன் வளா்ப்புத் துறை தலைவா் சா. ஆதித்தன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.