கோவில்பட்டி பாரதிநகரில் புறக்காவல் நிலையம் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
கோவில்பட்டி நகராட்சி பாரதிநகா் மேட்டுத் தெருவில் புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். இதையடுத்து, அங்கு அமைக்கப்பட்ட புறக்காவல் நிலையத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் திறந்தாா்.
காவலா் குடியிருப்பில் காவலா்கள் மற்றும் இளைஞா்கள் சாா்பில் நடைபெற்ற பொங்கல் விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு அவா், பரிசுகள் வழங்கிப் பாராட்டினாா். இதில், டிஎஸ்பி கலைகதிரவன், காவல் ஆய்வாளா்கள் சுதேசன், அய்யப்பன், சுகாதேவி, பத்மாவதி, ராணி, கஸ்தூரி, உதவி ஆய்வாளா்கள், சிறப்பு உதவி ஆய்வாளா்கள், காவலா்கள், குடும்பத்தினா் கலந்துகொண்டனா்.