தூத்துக்குடி

தூத்துக்குடி கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பு ஒத்திகை

DIN

தூத்துக்குடி மாவட்ட கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது.

மும்பை தாக்குதலுக்குப் பின்னா் கடலோர பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில், நாடு முழுவதும் அவ்வப்போது கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்படுவது வழக்கம்.

அதன்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் சீ விஜில் என்ற பெயரில் பாதுகாப்பு ஒத்திகை செவ்வாய்க்கிழமை காலை 6 மணிக்கு தொடங்கி புதன்கிழமை மாலை 6 மணி வரை நடைபெற்றது.

தூத்துக்குடி கடலோர பாதுகாப்புக் குழும காவல் ஆய்வாளா் சைரஸ், தூத்துக்குடி மத்தியபாகம் காவல் ஆய்வாளா் ஜெயபிரகாஷ் மற்றும் போலீஸாா் கடல்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா். இந்நிலையில், பழைய துறைமுகத்தில் இருந்து கிழக்கே 2 கடல்மைல் தொலைவில் படகில் தீவிரவாதிகள் வேடத்தில் இருந்த 12 பேரை கடலோர போலீஸாா் பிடித்து விசாரணை மேற்கொண்டனா்.

இதேபோல், தூத்துக்குடி மத்திய பாகம் போலீஸாா் 5 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

‘பிணைக்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’: 17 நாடுகளின் கூட்டறிக்கை!

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

SCROLL FOR NEXT