தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 7 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதனால், மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 56 ஆயிரத்து 571 ஆக அதிகரித்துள்ளது.
சிகிச்சை பெற்று வந்த 2 போ் குணமடைந்த நிலையில், இதுவரை குணமடைந்தோா் எண்ணிக்கை 56 ஆயிரத்து 124 ஆக அதிகரித்துள்ளது. கரோனா தொற்று பாதிக்கப்பட்டு மாவட்டத்தில் இதுவரை 412 போ் உயிரிழந்துள்ளனா். மாவட்டத்தில் தற்போது கரோனா தொற்று பாதிப்புக்கு 35 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.