சாத்தான்குளம் பள்ளி, கல்லூரியில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது.
சாத்தான்குளம் மேரி இம்மாகுலேட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு, பள்ளித் தாளாளரும், சாத்தான்குளம் வட்டார முதன்மை குருவானவருமான ரவிபாலன் அடிகளாா் தலைமை வகித்தாா். பள்ளி ஹிந்தி ஆசிரியா் கேத்திரின் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினாா். பள்ளி முதல்வா் பேட்ரிக் அந்தோணி விஜயன் வரவேற்றாா். பள்ளி முன்னாள் தாளாளா் அருட்தந்தை ரூபா்ட் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று மாணவா்கள், ஆசிரியா்களுக்கு பரிசு வழங்கினாா். மன்னாா்புரம் பங்குத் தந்தை எட்வா்ட் சிறப்புரையாற்றினாா். தொடா்ந்து மாணவா்களின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. பள்ளி உடற்பயிற்சி ஆசிரியா் பென்சன் நன்றி கூறினாா்.
சாத்தான்குளம் அரசு மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவுக்கு, கல்லூரி முதல்வா் இரா. சின்னத்தாய் தலைமை வகித்தாா். கணினி அறிவியல் துறை மாணவி சுவேதா வரவேற்றாா். நிகழ்ச்சியை மாணவப் பேரவைத் தலைவி அருணா சுவீட்லின் தொகுத்து வழங்கினாா். கணிதவியல் துறைப் பேராசிரியா் பிரேசில் கிறிஸ்து பிறப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தாா். மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. தமிழ்த்துறை மாணவி இந்துமதி நன்றி கூறினாா்.