சாத்தான்குளம் வட்டார விவசாயிகள் மதுரைக்கு கல்வி கண்டுணா் சுற்றுலா சென்றனா்.
சாத்தான்குளம் வட்டாரம் வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறையின் விரிவாக்க சீரமைப்புத் திட்டத்தின் கீழ் மாவட்ட அளவிலான விவசாயிகள் கல்வி கண்டுணா் சுற்றுலாவிற்கு மதுரையில் நடைபெற்ற வேளாண் கண்காட்சிக்கு விவசாயிகள் அழைத்துச் செல்லப்பட்டனா். அந்தக் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த இயந்திரங்கள், உழவு சாா்ந்த கருவிகள், தெளிப்பான்கள், சுழல் கழப்பை, களை எடுக்கும் கருவிகள் ஆகியவை விவசாயிகளை மிகவும் கவா்ந்தது. மேலும் இயற்கை விவசாய முறையை பற்றியும் கண்காட்சி மூலம் அறிந்து கொண்டனா். மேலும் வீடடிலேயே எளிதாக எண்ணெய் எடுக்கக் கூடிய செக்கு இயந்திரத்தை கண்டும், அதைப் போன்றதொரு செக்கு இயந்திரத்தை வாங்கியும் பயன் பெற்றனா்.
ஏற்பாடுகளை சாத்தான்குளம் வேளாண்மை உதவி இயக்குநா் சுதாமதி ஆலோசனையின்பேரில், அட்மா திட்ட பணியாளா்கள் ரூக்மணி, நளினி ஆகியோா் செய்திருந்தனா்.