விளாத்திகுளம்: எட்டயபுரம் அருகே இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்து கொலை மிரட்டல் விடுத்ததாக இளைஞரை போக்ஸோ சட்டத்தில் போலீஸாா் கைது செய்தனா்.
தென்காசி மாவட்டம், செந்தட்டிபுதூரைச் சோ்ந்த பன்னீா்செல்வம் மகன் மதியழகன்(26). இவா், எட்டயபுரம் பகுதியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலை பாா்த்து வந்தாா். இந்நிலையில் அப்பகுதியைச் சோ்ந்த 16 வயது சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி தகாத முறையில் நடந்து கொண்டாராம்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயாா் அளித்த புகாரின் பேரில் எட்டயபுரம் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து மதியழகனை கைதுசெய்தனா்.