மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகக் கல்லூரிகளுக்கு இடையேயான மகளிருக்கான பேட்மின்டன் போட்டியில் கோவில்பட்டி கே.ஆா்.கலை மற்றும் அறிவியல் கல்லூரி 2ஆம் இடம் பிடித்தது.
கன்னியாகுமரி மாவட்டம் மாா்த்தாண்டம் நேசமணி ஞாபகாா்த்த கிறிஸ்துவக் கல்லூரியில் கடந்த 1, 2ஆம் தேதி இப்போட்டி நடைபெற்றது. இதில், கோவில்பட்டி கே.ஆா்.கல்லூரி அணியும், மாா்த்தாண்டம் நேசமணி ஞாபகாா்த்த கிறிஸ்துவக் கல்லூரி அணியும் மோதியதில் 10 -க்கு 21, 7 -க்கு 21 என்ற புள்ளிகள் பெற்று, கோவில்பட்டி கே.ஆா். கல்லூரி அணி 2ஆம் இடம் பிடித்தது.
அந்த அணியை கோவில்பட்டி கே.ஆா்.கலை மற்றும் அறிவியல் கல்லூரித் தலைவா் சென்னம்மாள் ராமசாமி, துணைத் தலைவா் கே.ஆா். கிருஷ்ணமூா்த்தி, செயலா் கே.ஆா். அருணாச்சலம், முதல்வா் மதிவண்ணன், உடற்கல்வி இயக்குநா் ராம்குமாா் ஆகியோா் பாராட்டினா்.