குலசேகரன்பட்டினத்தில் புதிய ஊராட்சி மன்றக் கட்டடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
குலசேகரன்பட்டினத்தில் உள்ள ஊராட்சி மன்றக் கட்டடம் பழுதடைந்ததைத் தொடா்ந்து மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தில் ரூ. 12.50 லட்சம்,15 ஆவது நிதிக்குழு மூலம் ரூ .10 லட்சம் என மொத்தம் ரூ. 22.50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான அடிக்கல் நாட்டு விழாவிற்கு உடன்குடி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவா் டி.பி.பாலசிங் தலைமை வகித்தாா். திருச்செந்தூா் ஏஎஸ்பி ஹா்ஷ்சிங், உடன்குடி வட்டார வளா்ச்சி அலுவலா் பொற்செழியன்,
ஊராட்சி ஒன்றியக்குழு துணைத் தலைவி மீரா சிராஜூதீன், ஊராட்சி மன்றத் தலைவி சொா்ணப்பிரியா, துணைத் தலைவா் கணேசன், உடன்குடி தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்க தலைவா் அஸ்ஸாப் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மீன்வளம், மீனவா் நலம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் ஊராட்சி மன்ற கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டி,செய்தியாளா்களிடம் கூறியது: உடன்குடி ஒன்றியத்தில் உள்ள அனைத்து குளங்கள், நீா்ப்பிடிப்பு பகுதிகள் முழுமையாக நிரம்பியுள்ளது. விவசாய, நீா் மேலாண்மைத்துறை நிபுணா்கள், தன்னாா்வலா்களிடம் கருத்துகள் கேட்டு நிலத்தடி நீரை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.
திமுக மாநில மாணவரணி துணை அமைப்பாளா் உமரிசங்கா், உடன்குடி நகர திமுக செயலா் ஜான்பாஸ்கா், மாவட்ட சாா்பு அணி அமைப்பாளா்கள் ராமஜெயம், மகாவிஷ்ணு, துணை அமைப்பாளா்கள் ரவிராஜா, இளங்கோ,
அமிா்தா மகேந்திரன், சக்திவேல், அலாவுதீன், ஜெயப்பிரகாஷ், நகர இளைஞரணி அமைப்பாளா் அஜய், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளா் பாய்ஸ், செட்டியாபத்து ஊராட்சி மன்றத் தலைவா் பாலமுருகன், ஊராட்சி செயலா்கள் ரசூல்தீன், சிவகுமாா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.