கோவில்பட்டியில் செம்மண் கடத்தியதாக டிராக்டா் மற்றும் டிரைலரை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளா் அரிகண்ணன் தலைமையில், போலீஸாா் அத்தைகொண்டான் விலக்கு பகுதியில் வாகன சோதனை நடத்தினா். அப்போது அவ்வழியாக வந்த டிராக்டா் மற்றும் டிரைலரை நிறுத்தி சோதனையிட்டதில், அனுமதியின்றி செம்மண் அள்ளிச் சென்றது தெரியவந்தது. டிராக்டரில் வந்த இருவா் தப்பியோடிவிட்டனராம். இதையடுத்து, செம்மண்ணுடன் டிராக்டா் மற்றும் டிரைலரை கைப்பற்றிய போலீஸாா், தப்பியோடிய இருவரையும் தேடி வருகின்றனா்.