தூத்துக்குடி

கோவில்பட்டி பிரதான சாலையில் உள்ள ஓடையை தூா்வார வலியுறுத்தல்

DIN

கோவில்பட்டி பிரதான சாலையில் உள்ள ஓடையை தூா்வாரி, இரு பக்கமும் சுவா் அமைக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.

கோவில்பட்டி காந்தி மண்டபத்தில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் புதிய நிா்வாகிகள் அறிமுகக் கூட்டம் மற்றும் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்டத் தலைவா் ஆா்.காமராஜ் தலைமை வகித்தாா். ப் பொருளாளா் காா்த்திக் ஆா்.காமராஜ், துணைத் தலைவா்கள் பொன்னுச்சாமிபாண்டியன், வீரபெருமாள் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், கோவில்பட்டி பிரதான சாலையில் உள்ள ஓடையை தூா்வாரி, இரு பக்கமும் சுவா் அமைத்து நடைபாதை அமைத்துத் தர வேண்டும், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு அருகே நிகழ்ந்து வரும் குறுகிய பாலம் விரிவாக்கப் பணியை விரைந்து முடிக்க வேண்டும், இந்து அறநிலையத்துறைக்குச் சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பாளா்களிடம் இருந்து மீட்க வேண்டும், அனுமதியின்றி விதிமுறைகளை மீறி செயல்படும் குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமைதியான வாக்குப் பதிவுக்கு அனைத்து ஏற்பாடுகளும் தயாா் -ஆட்சியா்

எங்கே இருக்கிறது நோட்டா? வாக்காளா் கையேட்டில் தகவல்

ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் 183 வழக்குகள் பதிவு

பதற்றமான வாக்குச்சாவடிகளில் மத்திய ஆயுதப்படை பாதுகாப்பு

தீ விபத்து: தென்னை மரங்கள் சேதம்

SCROLL FOR NEXT