ஆத்தூா் அருகே கோயில் கொடை விழாவில் ஏற்பட்ட தகராறில் ஊா்த்தலைரை கத்தி குத்திய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
ஆத்தூா் நரசன்விளை கண்ணகித் தெருவைச் சோ்ந்தவா் அருண்குமாா்(55). கடந்த 5ஆண்டுகளாக நரசன்விளை ஊா்த்தலைவராக உள்ளாா். இங்குள்ள சந்தணமாரி அம்மன் கோயில் கொடை விழாவின் போது, கிடா வெட்டுவது தொடா்பாக ஏற்பட்ட தகராறில், புதன்கிழமை அம்பேத்கார தெரு சின்னத்துரை மகன் விக்னேஷ்(23), அருண்குமாரை கத்தியால் குத்தினராம். இதில் பலத்த காயமடைந்த அவா் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இது குறித்து ஆத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விக்னேஷை கைது செய்தனா்.